Close Menu
Status Nadu
    Status NaduStatus Nadu
    • Home
    • Status
    • Quotes
    • Wishes
    • Lyrics
    • PDF
    Subscribe
    Status Nadu
    Status Nadu
    Status Nadu
    Home»PDF»Vinayagar Agaval tamil pdf download

    Vinayagar Agaval tamil pdf download

    Vinayagar Agaval is a devotional poetic hymn to the Hindu deity Ganesha. Check the link below to get Vinayagar Agaval tamil pdf download,It was written in the 10th century during the Chola dynasty by the Tamil poet Avvaiyar, shortly before her death.It is considered to be her greatest poem.The 72-line ‘Agaval’ is a form of blank verse, close to speech.

    Vinayagar Agaval defines a religious path, part of the Tamil devotional tradition of Bhakti, within the Hindu philosophy of the Shaivite sect. Its application as a spiritual tool begins during concentration on a physical image of Ganesha and continues with the use of the Agaval’s description of Hindu spiritual belief and practice, and aspects of the teachings on human life attributed to the deity.According to Chandrasekarendra Swamigal, a person reciting the Vinayagar Agaval every day will realize highest wisdom.

    Vinayagar Agaval tamil pdf download
    (Vinayagar Agaval tamil pdf download Credits Goes to Respective Owners)

    Vinayagar Agaval tamil pdf download

    விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது.
    இதனைப் பாடிய ஔவையார் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

    • விநாயகப் பெருமான் தோற்றம்
    • யோகாசன மூச்சுப் பயிற்சி

    முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.

    • அஞ்சு, லயம் முதலான கொச்சைச் சொற்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • மூஷிக வாகனம் என்பதை இவர் மூடிக வாகனம் எனக் குறிப்பிடுகிறார்.

    இந்த நூல் காட்டும் தெளிவு

    • அணுவிற்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய்க், கணு முற்றி நின்ற கரும்புளே காட்டி 
    • வாக்கும் மனமும் இல்லா மனோ லயம் தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து.
    • சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.
    • மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால்(காற்றால்) எழுப்பும் 

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்

    பாதச் சிலம்பு பலஇசை பாட

    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

    வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப

    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

    அஞ்சு கரமும் அங்குச பாசமும்

    நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்

    நான்ற வாயும் நாலிரு புயமும்

    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

    திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்

    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

    அற்புதம் நின்ற கற்பக் களிறே!

    முப்பழம் நுகரும் மூஷிக வாகன

    இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

    தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி

    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

    திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்

    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

    குருவடி வாகிக் குவலயந் தன்னில்

    திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என

    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

    உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்

    தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி

    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

    கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)

    இருவினை தன்னை அறுத்திருள் கடித்து

    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

    ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

    ஆறா தாரத்து அங்குச நிலையும்

    பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

    கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி

    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

    குண்டலி அதனில் கூடிய அசபை

    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

    மூலா தாரத்து மூண்டெழு கனலைக்

    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

    குமுத சகாயன் குணத்தையும் கூறி

    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

    உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

    சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்

    எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்

    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

    தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி

    கருத்தினில் கபால வாயில் காட்டி

    இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி

    என்னை அறிவித்து எனக்கருள் செய்து

    முன்னை வினையின் முதலைக் களைந்து

    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

    தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

    இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன

    அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்

    எல்லை இல்லா ஆனந்தம் அளித்து

    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.

    அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

    நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்

    தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

    வித்தக விநாயக! விரை கழல் சரணே!.

    Copyright/DMCA : We Do not own any copyrights of this pdf file. This Vinayagar Agaval tamil pdf download Was uploaded on various places on public domains and in fair use format. And Also We uploaded this pdf for educational and Spiritual Purpose only, If you want this This Vinayagar Agaval tamil pdf download to be removed or if it is copyright infringement, do drop us an email at tamilliftweb@gmail.com and this will be taken down within 24 hours !

    Also View
    • Kandha Sasti Kavasam tamil pdf download
    • Thiruvasagam tamil pdf download
    • Garuda Puranam in Tamil pdf download
    • Thirukkural 1330 kural in tamil pdf download
    • Deivathin kural tamil pdf download
    • Mahabharatham in tamil pdf download
    • Ayyappan 108 saranam in tamil pdf download
    Share. Facebook WhatsApp Twitter Telegram Email Pinterest

    Related Posts

    PDF

    Ayyappan 108 saranam in tamil pdf download

    PDF

    Thiruvasagam tamil pdf download

    PDF

    Garuda Puranam in Tamil pdf download

    Follow Us On
    • Facebook
    • Twitter
    • YouTube
    © 2025 StatusNadu.com All Rights Reserved.
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Disclaimer
    • About us
    • Contact us

    Type above and press Enter to search. Press Esc to cancel.